கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராணி(57) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தீபன் ராஜ்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிக்க முயன்றது கவரிங் நகை என்பது குறிப்பிடத்தக்கது.