கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பி. டி. ஒ. அலுவலகம் அருகே மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், மத்திய, மாநில அரசுகள் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறைகேடாக வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதில்லை என்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.