கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதான மாருதி, கடந்த மே 20 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கொத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததில் மாருதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.