பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விவேக்குமார் (23) என்பவர் பேரிகை அருகே ராமச்சந்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், சம்பவத்தன்று செல்போனில் பேசியபோது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விவேக்குமார் தற்கொலை செய்து கொண்டார். பேரிகை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.