கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அடுத்த என். தட்டக்கல் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர்களுக்கு சமுதாய கழிப்பிடம் இல்லாத நிலையில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் 2022-2023ஆம் ஆண்டில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த சமுதாய கழிப்பிட கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.