கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தர்பூசணி குவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை 15 ரூபாயாக குறைந்துள்ளது. தற்போது போச்சம்பள்ளி பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இதை போக்க பொதுமக்கள் குளிர்ச்சியான தர்பூசணி அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மேலும் தர்பூசணி விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.