கிருஷ்ணகிரி: லாரி - இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்துள்ள மருதேரி ஏரிக்கரை வளைவில் அதிவேகமாக டிம்பர் லாரி ஒன்று திரும்பிய போது எதிரே வந்த டூவீலரும் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் டூவீலரில் ஓட்டி வந்த சின்ன பாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் படுகாயம் அடைந்து அபாயகரமான நிலையில் இருந்த பெருமாளை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி