கிருஷ்ணகிரி: மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய ஆட்சியர்

பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் 367 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ. 4,817 மதிப்பிலான, மொத்தம் ரூ. 17,67,920 மதிப்பிலான மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி