தேர்வறையில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி. இவர் பர்கூர் அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வு எழுத சென்றார். அந்த நேரம் மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக இருந்த போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரமேஷ் (44) என்பவர் வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி இவர் பணியில் இருந்தார். 

இந்த நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அந்த 17 வயது மாணவியின் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியால் தேர்வை சரிவர எழுத முடியாமல் தவித்துள்ளார். இந்த நிலையில் தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த சிறுமியை அவர் பயின்ற பள்ளியின் முதல்வர், ஏன் சோகமாக இருக்கிறாய். தேர்வு சரியாக எழுதவில்லையா என கேட்டுள்ளார். 

அப்போது தேர்வு அறையில் தன்னிடம் ஆசிரியர் நடந்துகொண்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதே போல் அதே அறையில், அதே பள்ளியை சேர்ந்த தேர்வு எழுதிய மாணவி ஒருவரும், தன்னிடமும் அவ்வாறு ஆசிரியர் ரமேஷ் நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இதை அடுத்து புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி