கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசு (36) தனியார் நிறுவன ஊழியர். இவரும், விக்னேஷ் என்பவரும் டூவீலரில் நேற்று சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரும். டூவீலரும் மோதி கொண்டன. இந்த விபத்தில் தமிழரசு, விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவரிகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் தமிழரசு உயிரிழந்தார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.