கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். அதேபோல் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் பிரேம்குமார், மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.