கிருஷ்ணகிரி: குளிர்பானம் குடித்த மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீடுகளுக்கு சென்ற மாணவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டனர். 

மறுநாள் பள்ளிக்கு மாணவர்கள் வராததை அறிந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தியதில் குளிர்பானம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். உடனே மாணவர்களை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதில் ஒரு மாணவன் மட்டும் ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவக்குழு நேற்று பள்ளியில் முகாம் அமைத்து மாணவர்களுக்கு பரிசோதனை செய்தது.

தொடர்புடைய செய்தி