நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (65). இவர் நேற்று (செப்.11) மாலை வீட்டிலிருந்து திருவண்ணாமலை- பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த டூவீலர் முருகேசன் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் முருகேசன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான முருகேசனுக்கு முருகம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி