வாடமங்கலம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் நீர்ப்பாசனத்திற்கு ஏரி உள்ளது. ஏரியை குத்தகைக்கு விட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ஏரியின் குத்தகை முடிந்தது. இந்த நிலையில் குறைந்த அளவே உள்ள தண்ணீரில் மீன்கள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி