கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மருதேரி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூர்ஆளி கிராமத்தில் நேற்று பி.ஜே.பி.யில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநிலச் செயலாளர் அஸ்வத் ராமன் முன்னிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டனர்.
இந்த விழாவில் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தேசிய தலைவர்கள், மண்டல தலைவர், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் திரளான பொதுமக்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.