சென்னை ரோகினி திரையங்கில் ’கில்லி’ மற்றும் ’துணிவு’ படம் பார்க்க வந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் கில்லி படம் வெளியாகியுள்ள திரைக்கு சென்ற ’கடவுளே அஜித்தே’ என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களும் பதிலுக்கு ’தளபதி’ என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பி வந்தனர்.சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வைத்தனர்.