சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.3) மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கொலு வருகின்ற 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கொலுவில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகவிஷ்ணு உள்ளிட்ட அனைத்து சாமிகள், உயிரினங்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி