வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 நபர்களின் ரூ.18.75 கோடி மதிப்பிலான 1,620 வங்கி கடன்களை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து செலுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில், கடன் சுமையை அரசே ஏற்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர கேரளா அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.