கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் முகம்மது சுஹைல் அன்சாரி. இவர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும், திருமணமான ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனையறிந்த பெண்ணின் கணவர், மனைவியை கண்டித்துள்ளார். இதனால், அப்பெண் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, அவர் எழுதிய கடிதத்தில், தற்கொலைக்கு முகம்மது சுஹைல் அன்சாரி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.