கவின் ஆணவக் கொலை விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஏன் மௌனமாக இருந்தார் என கேள்வி எழுகிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஆணவக் கொலை விவகாரம் குறித்து விஜய் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் இதுவரை கவின் ஆணவக் கொலை தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் பல்வேறு கட்சிகளும் விமர்சனம் முன்வைத்துள்ளன.