குளித்தலையில் திருமணமான இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அழகுரத்தினம் மகள் சரஸ்வதி (26) என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி