குளித்தலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (58). இவர் பெரிய பாலத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று பெரியபாலம் பகுதியில் லோகநாதன் என்பவரின் மின்கம்பத்தில் மின் இணைப்பு செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மகன் ராமநாதன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி