கரூர் மாவட்டம் தோகைமலை கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற மோகன்ராஜ் 65, கணேசன் 51, துரைராஜ் 37 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.