வீட்டின் உரிமையாளரான அரசு பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் இதைப் பார்த்து வனத்துறையினர் மற்றும் முசிறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் புள்ளிமானை வலைவீசி பிடித்தனர். வலையில் பிடிக்கும்போது மானிற்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் மொழியரசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து அவர் புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் வனஅலுவலர் ஈஸ்வரி மற்றும் வனவர் சிவரஞ்சனி ஆகியோர் புள்ளிமானை மீட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்