கரூர் மாவட்டம் வடசேரி பெரிய ஏரியில் 100க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி மான்கள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. இந்நிலையில், போஜாநாயக்கன்பட்டியில் தண்ணீர் இல்லாத கிணற்றில் 2 வயது ஆண் புள்ளிமான் தவறி விழுந்தது. தகவல் அறிந்த கரூர் வனச்சரக அலுவலர்கள், மணப்பாறை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மானை மீட்டனர். பின்னர், மானை கடவூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.