நெய்தலூர் காரணி கடைவீதியில் லாட்டரி விற்றவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் 31. இவர் நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முருகானந்தம் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி