இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு ஊற்றினர். அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. எழுநூற்று மங்களத்தை சுற்றியுள்ள திரளான பொதுமக்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்