இது சம்பந்தமாக நேற்று நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜனிடம் சந்தித்தபோது பொறியாளர்களை தர குறைவாக பேசி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம் என்று பேப்பரை முகத்தில் தூக்கி எறிந்து, மண்டல இயக்குனருக்கே நாங்கள் தான் பணம் தருகிறோம் என்று கூறியதாகவும், இதனால் கோபம் அடைந்த பொறியாளர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்று ஆய்வாளரை கண்டித்து காலை முதல் இரவு வரை நீதி கேட்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் நந்தகுமார், குளித்தலை காவல் துறை உதவி ஆய்வாளர் சரவணகிரி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்