குளித்தலையில் மயங்கி கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கோட்டையார் தோட்டத்தைச் சேர்ந்த 61 வயதான மணி, உடல் நலக்குறைவால் குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் பிரேமலதா அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி