அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, கமல வாகனம், பூத, சிம்ம, கைலாச, யானை, குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் உற்சவமூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி இன்று சுரும்பார்குழலி உடனுறை இரத்தினகிரீசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 5.30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று காலை இழுக்கப்பட்ட தேர் நான்கு கிலோமீட்டர் மலையை சுற்றி மீண்டும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தேர் நிலையை அடைய உள்ளது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு பணிகளுக்காக 186 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.