கரூர்: பைக்குகள் மோதி கொண்டு விபத்து

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் விநாயகர் புறம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 27. இவர் நேற்று தனது பைக்கில் மாடு விழுந்தான் பாறை சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லோகநாதனின் பைக் மோதியதில் முத்துக்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் சகோதரி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் நேற்று (ஜூன் 14) வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி