இவரது வாகனம் கந்தசாரப்பட்டி அருகே சென்றபோது, எதிர்த் திசையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, லந்தகோட்டை அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், ரங்கசாமி ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ரங்கசாமியின் மகன் ராஜேஷ் குமார் (28) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியணை காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கருப்பண்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.