இதன் காரணமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையில் திறக்கப்பட்ட உபரி நீர் ஏறக்குறைய ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் மாயனூர் கதவணையிலும் நீர்வரத்து சரிந்தது.
இன்று காலை ஆறு மணி நிலவரப்படி கதவணைக்கு நீர்வரத்து 63,966 கன அடியாக குறைந்தது. இதில் காவிரி ஆற்றில் 62,496 கன அடி நீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாயனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியது.