கரூர்: விரக்தியில் வாலிபர் தற்கொலை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சாயத்து அரிஜன தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 44. அண்மைக்காலமாக தொடர்ந்து மது குடித்ததால் கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஆனந்தன், மார்ச் 11ஆம் தேதி காலை 7 மணி அளவில், கோவில்பாளையம் அமராவதி ஆற்றுப்படுகையில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

சம்பவம் அறிந்த ஆனந்தனின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆனந்தனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி