கரூர்: லாட்டரி சீட்டு விற்ற ஆறு பேர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலவிடுதி, கடவூர், அய்யம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். அதனை எடுத்து லாட்டரி சீட்டு விற்ற கருப்பசாமி, சரவணன், ஆறுமுகம், சக்திவேல், பாலசுப்ரமணியம், ஆண்டிவேல் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 93 லாட்டரி சீட்டுகள், ரூ. 2175 பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி