கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடியில் கடந்த 30 நாட்களாக மின்மாற்றி பழுதாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டையும், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற முடியாமலும் தவித்து வருகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் மின்மாற்றி அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.