கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர், மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளித்து போராட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாய சங்க தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கடவூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வழங்காததை கண்டித்தும், தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றிய நிர்வாகம் கண்டும் கொள்ளாமல் வருவதாக கண்டன கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பின்பு 100 நாள் வேலை வழங்க கோரி ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமாரிடம் மனு வழங்கப்பட்டது.