ஓடமுடையார் பாளையம் - டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்

கரூர் மாவட்டம், புலியூர் அருகே ஓடமுடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (45). இவர் செப்டம்பர் 1-ம் தேதி மாலை 6: 45 மணி அளவில், கோவில் பாளையத்திலிருந்து ஓடமுடையார் பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஓடமுடையார் பாளையம் புது பாலம் அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்த டூ வீலர் நாராயணன் ஓட்டி சென்ற டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த நாராயணன் மனைவி சரண்யா (36) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி