கரூர்: புதிய வகுப்பறைகளை திறந்து வைத்த எம்எல்ஏ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நல துவக்க பள்ளியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய 2 வகுப்பறையை இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து, பள்ளி மாணவ -மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சத்திய பால கங்காதரன், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, உதவி ஆசிரியை சுபா ஆனந்தி, ஊர் முக்கியஸ்தர் கார்த்தி உள்ளிட்ட மாணவ - மாணவியர் , ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வகுப்பறை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி