இன்று துவங்கி நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் வரவேற்பு குழு தலைவராக தமிழ்வாணன், முன்னாள் மாநில தலைவர் R. தமிழ்ச்செல்வி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க சம்மேளன துணைதலைவர் சதீஷ் ரானா, முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பார்த்தசாரதி, ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக கொடியேற்றமும், தியாகிகளுக்கு அஞ்சலியும் செலுத்தி மாநாட்டை துவக்கினர். தொடர்ந்து இன்று மாலை மகளிர் மாநாடு மாநில துணை தலைவர் சாந்தகுமாரி தலைமையில் நடைபெற உள்ளது. நாளை 2வது நாள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது