கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மாவத்தூர் அடுத்த நாச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 46. இவர் வாழ்வார்மங்கலம் டாஸ்மாக் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் மது விற்ற பழனிச்சாமி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 27 பிராந்தி மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.