இதேபோல் வயலூர் ஊராட்சியில் தாட்கோ பொது மேலாளர் செந்தில்வேலன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுமான பணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் இருக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் கூடத்தையும் உணவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகவும் தரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வேப்பங்குடியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து செவிலியர்களிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவை குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு