இவரது டூவீலர் லாலாபேட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது,அதே சாலையில் கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மின்சார பேருந்து மலைசாமி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் மலைசாமிக்கு பின்னங்கால், மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மலைசாமியின் மகன் ராகுல் வயது 25 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மின்சார பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.