நடைபெற்ற இந்த போட்டியில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்து கொண்ட குதிரைகளின் சாரதிகள், குதிரைகளை லாவகமாக கையாண்டு வெற்றி பெறும் முனைப்போடு சாலையில் சீறிப்பாய்ந்திட செய்தனர். ஒவ்வொரு குதிரையும் போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. போட்டி இலக்காக 10 கிலோமீட்டர், எட்டு கிலோமீட்டர், ஆறு கிலோமீட்டர் தூரம் என குதிரைகளின் பிரிவு வாரியாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுத்தொகை & கேடயங்கள் வழங்கி வாழ்த்தப்பட்டன. இந்த போட்டியை காண, கரூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா