கரூர்: திமுக பிரமுகரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா புங்கம்பாடியை சேர்ந்தவர் கரிகாலன் 43 இவர் கடவூர் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். நேற்று கரிகாலன் வீட்டின் முன்பு புங்கம்பாடியைச் சேர்ந்த ஹேமநாத் என்பவருக்கும் பூஞ்சோலை பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதை கரிகாலன் இருவரையும் சமாதானப்படுத்தி எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாளை காலை பேசிக்கலாம் என்று அனுப்பி வைத்துள்ளார். 

அதன் பிறகு நேற்று ஒரு மணி அளவில் கரிகாலன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரமேஷ், பாலகிருஷ்ணன், அஜித் ஆகிய மூன்று பேரும் கரிகாலனை தகாத வார்த்தைகளால் திட்டி சட்டையை பிடித்து இழுத்து கையால் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வருவதைப் பார்த்து மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கரிகாலன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் 3 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி