பார்த்தீபன், கௌதம் ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 3-வது குற்றவாளி பிரவீன் (எ) வெங்கடேஷ் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 02 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார்.
இந்நிலையில் கரூர் அமர்வு நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக அகிலன் தலைமையிலான கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்புப் பிரிவினர் வெங்கடேஷை திருச்சியில் நேற்று கைது செய்து, இன்று பிப்ரவரி 8ல் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வருகிறது. பிரவீனை கைது செய்த கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்புப் பிரிவினருக்கு கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார்.