இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரம்யாவை கரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 8) உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்த ரம்யாவின் கணவர் ஜெகநாதன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ரம்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.