தந்தையின் உடலைப் பார்த்து துக்கம் தாங்காமல் அப்பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டின் அருகே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுலட்சுமியின் கணவர் சரவணபிரபு (வயது 37) என்பவர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மஞ்சுலட்சுமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.