கிணத்துப்பட்டி: பூலாம்வலசு-மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்ட பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அய்யலூர் அருகே உள்ள கிணத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் வயது 40. இவர் கடந்த நான்கு வருடங்களாக திருமணத்திற்கு மீறிய உறவால் சித்திரவேல் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மூச்சுத் திணறல் நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை. 

எனவே டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென மூச்சு திணறல் தீவிரமாக ஏற்பட்டது. உடனடியாக அவரை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பொன்னம்மாளை பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த பொன்னம்மாளின் தாயார் ஆண்டியம்மாள் வயது 70 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பொன்னம்மாளின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி