இவர்களது வாகனம் நொய்யல் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது, எதிர் திசையில், கரூர், வேட்டமங்கலம் மேற்கு, முன்னூத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், அபூபக்கர் சித்திக் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த அனிஷா மற்றும் குழந்தை ஆயிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக அபூபக்கர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், இதுதொடர்பாக டிராக்டரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.